அமராவதி: ஆந்திர மாநிலம் அனங்காபள்ளியில் இருந்து 22 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனைச்சாவடியில் நடத்தப்பட்ட வாகன சோதனையின் போது இருவரும் சிக்கினர். நெல்லூரில் இருந்து சென்னை வந்த பேருந்தை சோதனை செய்தபோது கஞ்சா கடத்திய வேல்முருகன் (20), சிவரஞ்சீவி (24) ஆகியோரை கைது செய்தனர்.