அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக 5 இடங்களை கைப்பற்றியது. இதில் ஜூனாகத் மாவட்டம் விசாவதார் தொகுதியில் ஆம் ஆத்மியின் பூபேந்திர பயானி வெற்றி பெற்றார். கடந்த 13ம் தேதி பூபேந்திர பயானி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா இந்நிலையில் அடுத்த மாதம் பாஜவில் இணைய உள்ளதாக பயானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அகமதாபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பூபேந்திர பயானி, “வரும் பிப்ரவரி 3ம் தேதி என் சொந்த கிராமமான ஜூனாகத்தில் பாஜ மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் 2,000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் பாஜவில் இணைய உள்ளேன்” என்று கூறினார்.