புதுடெல்லி: நிலம் கையகப்படுத்தியதில் பணமோசடி தொடர்பான விவகாரத்தில் அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர சிங் ஹூடாவிடம் அமலாக்கத்துறை நேற்று விசாரணை நடத்தியது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபிந்தர் சிங் ஹூடா அரியானா மாநில முதல்வராக கடந்த 2014ம் ஆண்டு வரை பதவி வகித்து வந்தார். இவர் அரியானாவின் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய தலைவராகவும் பதவி வகித்தார். 2004-2007ம் ஆண்டுக்கிடையே அரியானாவின் மானேசரில் தொழிற்பேட்டைகளுக்கு நிலம் கையகப்படுத்தியதில் பண மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான பணமோசடி வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பும், அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று பூபிந்தர் சிங் ஹூடாவிடம் விசாரணை நடத்தினர்.