புதுடெல்லி: புதுடெல்லியில் கடந்த 9 மற்றும் 10 தேதிகளில் ஜி-20 உச்சிமாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கடந்த ஞாயிறன்று நாடு திரும்ப தயாரானபோது, அவரது தனி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அது சரி செய்யப்படும் வரை அவர்கள் இருநாட்களாக புதுடெல்லியில் தங்கியிருந்தனர். முன்னதாக நிலைமையை அறிந்த ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உடனடியாக விமான நிலையத்துக்கு சென்று ஜஸ்டின் ட்ருடோவை சந்தித்து, பாதுகாப்பாக தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார். நேற்று விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது. அதனையடுத்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவருடன் வந்த பிரதிநிதிகள் அனைவரும் அந்த விமானத்தில் மதியம் 1 மணியளவில் கனடா புறப்பட்டு சென்றனர்.