கோவை: வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஆட்சி ஏதாவது நன்மை செய்ததா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். பெற்றோரை பதைபதைக்க வைத்த பொள்ளாச்சி கொடுமைதான் அதிமுக ஆட்சியில் நடந்தது. தமிழ்நாட்டை பதற வைத்த பொள்ளாச்சி வழக்கை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியது அதிமுக. அதிமுக ஆட்சியில் அதிகாரமிக்க பதவியில் இருந்த அமைச்சர்கள், மேற்கு மண்டலத்துக்கு செய்தது என்ன? கஞ்சா, குட்கா, மாமுல் பட்டியலில் அமைச்சரும் டிஜிபியும் இருந்தது யார் ஆட்சியில் ? என முதலமைச்சர் கேட்டுள்ளார்.