சென்னை: இந்திய ஜனநாயக புலிகள் கட்சியில் இருந்து அக்கட்சித் தலைவர் மன்சூர் அலிகான் நீக்கப்பட்டுள்ளார். செயற்குழு ஒப்புதலின்றி அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் மன்சூர் அலிகான் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன் தலைமையில் வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள செயற்குழு முடிவு செய்துள்ளது.