நீலகிரி : நீலகிரி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என உதகையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மேலும் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தை அதிகம் நேசித்தவர் ஜெயலலிதா; அவரை அதிகம் நேசித்தவர்கள் இப்பகுதி மக்கள், ஜெயலலிதா இருந்தபோது எப்படி ஆதரவு அளித்தீர்களோ அதே போல் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்,” என இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.