வருசநாடு: தேனி மாவட்டம், வருசநாடு அருகே பசுமலைத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நடிகர் மாரிமுத்து (56). சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். அவர் சென்னையில் நேற்று முன்தினம் மாரடைப்பில் காலமானார். மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரான பசுமலைத்தேரி கிராமத்திற்கு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கொண்டு வரப்பட்டது.
மாரிமுத்துவின் தாயார் மாரியம்மாள் குடியிருந்து வரும் பூர்வீக வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உறவினர்கள் மற்றும சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாரிமுத்துவின் உடல் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மயானத்தில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது.