சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 12 உதவி கமிஷனர்கள் பணியிடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காத்திருப்போர் பட்டியலில் இருந்து டிஎஸ்பி கலியன் சென்னை மாநகர பாதுகாப்பு பிரிவு உதவி கமிஷனராகவும், மடிப்பாக்கம் உதவி கமிஷனராக இருந்த பிராங்க் டி.ரூபன் ஆவடி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனராகவும், நீலாங்கரை உதவி கமிஷனராக இருந்த சுதர்சன் தி.நகர் உதவி கமிஷனராகவும்,
சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த ராஜா வேப்பேரி உதவி கமிஷனராகவும், வேப்பேரி உதவி கமிஷனராக இருந்த கண்ணன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கும், ஆவடி மாநகர மணலி உதவி கமிஷனராக இருந்த தட்சிணாமூர்த்தி சென்னை மாநகர பூக்கடை உதவி கமிஷனராகவும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் டிஎஸ்பியாக இருந்த சரண்யா சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும், கோவை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த அருண் சென்னை மாநகர கோயம்பேடு உதவி கமிஷனராகவும்,
பூக்கடை உதவி கமிஷனராக இருந்த பால கிருஷ்ணபிரபு சென்னை மாநகர மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனராகவும், செங்கல்பட்டு டிஎஸ்பியாக இருந்த பாரதி சென்னை மாநகர நீலாங்கரை உதவி கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த புருஷோத்தமன் மடிப்பாக்கம் உதவி கமிஷனராகவும், சிபிசிஐடி டிஎஸ்பியாக இருந்த ரமேஷ் அரும்பாக்கம் உதவி கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.