கட்சிரோலி: மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள திபாகட் பகுதியில் நக்சல்கள் வெடிகுண்டுகளை புதைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்தனர். அங்கு பல்வேறு இடங்களில் பிரஷர் குக்கரில் போட்டு புதைத்து வைக்கப்பட்டு இருந்த 6 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 6 ஐஈடி, வெடிப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.