சென்னை: அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிக்கப்பட்டிருந்தது. சமூக அரசியல், பொருளாதார மாற்றங்களை கணக்கில் எடுத்து, தமிழ்நாட்டின் நலனை முன்னிலைப்படுத்துவதும், இந்திய சமூக அரசியல் முன்னேற்றத்திற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்குவதுமான ஒரு தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழுவினர் தமிழ்நாடு முழுவதும் வரும் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை 9 மண்டலங்களுக்கு நேரில் சென்று தரவுகளை பெறவுள்ளனர். அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைத்துத் தரப்பு மக்களிடமும், ஒன்றிய அரசிடமிருந்து அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் எவை எவை என்று, நேரடியாக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து வந்தோ அல்லது அவர்களிடம் தரவுகளைப் பெற்று வந்தோ குழுவினரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.