உசிலம்பட்டி, ஏப். 2: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மதுரை மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில், வருவாய்த்துறை சார்பில் வருவாய் ஆய்வாளர் பிரியா தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் நர்மதா முன்னிலையில் உசிலம்பட்டி புதிய பேருந்து நிலையம் முன்பு இருக்கும் கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் விதமாக, வாக்களிப்பது ஜனநாயக கடமை என்ற வாசகம் அடங்கிய பலூன்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியின் கிராம நிர்வாக உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி உசிலம்பட்டியில் பலூன்கள் வழங்கி விழிப்புணர்வு
previous post