Thursday, May 16, 2024
Home » 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி உசிலம்பட்டியில் பலூன்கள் வழங்கி விழிப்புணர்வு

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி உசிலம்பட்டியில் பலூன்கள் வழங்கி விழிப்புணர்வு

by Karthik Yash

உசிலம்பட்டி, ஏப். 2: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மதுரை மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில், வருவாய்த்துறை சார்பில் வருவாய் ஆய்வாளர் பிரியா தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் நர்மதா முன்னிலையில் உசிலம்பட்டி புதிய பேருந்து நிலையம் முன்பு இருக்கும் கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் விதமாக, வாக்களிப்பது ஜனநாயக கடமை என்ற வாசகம் அடங்கிய பலூன்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியின் கிராம நிர்வாக உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

19 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi