தொண்டி, ஏப்.2: தொண்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் வெளியில் நடமாடவே அஞ்சுகின்றனர். பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்குகள் சேகரிக்க அதிக நாட்கள் வழங்கப்படும். இந்த முறை மிக குறைவான நாட்களே வழங்கப்பட்டது. அதிலும் வேட்பு மனு தாக்கல் உள்ளிட்ட பணிகளால் சில நாட்கள் கழிந்தது. குறைவான நாட்களில் வேட்பாளர்கள் மக்களை சந்தித்து வாக்குகள் சேகரிக்க வேண்டும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொண்டி பகுதி முழுவதும் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே வரவே அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். அதனால் வேட்பாளர்கள் காலை 12 மணியுடன் பிரசாரத்தை முடித்துக் கொண்டு மீண்டும் மாலையில் தொடங்குகின்றனர்.