திண்டுக்கல், செப்.2: திண்டுக்கல் மாவட்டத்தில் 10 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, முருகானந்தம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார், ஜான் பாஸ்டின் டல்லஸ் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் திண்டுக்கல் கிடங்கு மேலாளர், சங்கரசேகரன் கொடைக்கானல் கோட்ட கலால் அலுவலர், சரவண பாண்டியன் தமிழ்நாடு மாநில வாணிப கழக மாவட்ட மேலாளர், பாண்டிச் செல்வி திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர், சுகந்தி திண்டுக்கல் கிழக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார், சுதா லீலாவதி தேசிய நெடுஞ்சாலை எண் அலகு 2 நில எடுப்பு தனி தாசில்தார், நிர்மலா கிரேஸ் திண்டுக்கல் நகர் புறவழிச்சாலை நில எடுப்பு தனி தாசில்தார், சரவணன் ஆத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார், சரவணக்குமார் மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.