வைகுண்டம், ஜூன் 28: வைகுண்டம் கள்ள பிரான் கோயிலில் வசந்த உற்சவ விழா நடந்தது. வைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் 10 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறும். இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 6 நாட்களுக்கு முன்பு துவங்கி நடந்து வருகிறது. நேற்று காலை 7 மணிக்கு நாலாயிர திவ்யபிரபந்தம். 11.30 மணிக்கு தீர்த்தம் சடாரி கோஷ்டி, மாலையில் 5 மணிக்கு சாயரட்சை, 6 மணிக்கு தோளுக்கினியானில் தேவி, பூதேவி சமேதராக கள்ளபிரான் சுவாமி புறப்பாடு நடந்தது. 7.30 மணிக்கு சுற்றி தண்ணீர் நிரப்பப்பட்ட நீராழியில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி தீபாராதனை. நாலாயிர திவ்யபிரபந்தம், தீர்த்தம் சடாரி கோஷ்டி நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 8.30 மணிக்கு சுவாமி மூலஸ்தானத்திற்கு எழுந்தருளினார். நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், தக்கார் அஜித், ஆய்வாளர் நம்பி, அர்ச்சகர்கள் ரமேஷ், நாராயணன், ராமானுஜம், சீனு, ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வை. கோயிலில் வசந்த உற்சவம்
previous post