திருவாடானை, ஏப்.18: திருவாடானை அருகே எம்.வி.பட்டிணம் பகுதியில் முகம்மது அலி வீட்டின் பின்புறம் மாந்தோப்பில் விஷ வண்டுகள் கூடு கட்டியதால், அப்பகுதியில் செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் தொல்லை கொடுத்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் உடனடியாக திருவாடானை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அந்த மாந்தோப்பில் கூடு கட்டி இருந்த கொடிய விஷத்தன்மை கொண்ட வண்டுகளை தீ வைத்து அழித்து விட்டனர்.