Thursday, May 9, 2024
Home » விவசாய நிலத்தில் ஆண் சடலம்

விவசாய நிலத்தில் ஆண் சடலம்

by Karthik Yash

திண்டிவனம், ஜூன் 6: மயிலம் அடுத்த கீழ் எடையாளம் கிராமத்தில் உள்ள ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர் பரந்தாமன் என்பவரது நிலத்தில் உள்ள சவுக்கு தோப்பில் தூக்கில் தொங்கியபடி ஆண் சடலம் இருப்பதாக மயிலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்தவர் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் நீல நிற டி ஷர்ட், பேண்ட் அணிந்திருந்தார். அவரது மார்பு மற்றும் கையில் ராஜலட்சுமி, ராஜேஷ் என பச்சை குத்தப்பட்டுள்ளது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் அழகன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? முன்விரோதம் காரணமாக யாரேனும் அடித்து தூக்கில் தொங்க விட்டு சென்றனரா என்பது குறித்தும் பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

five + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi