திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரூ.5,000 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து அதிகரிப்பு மற்றும் வெயிலால் பூக்களின் தரம் குறைந்து காணப்படுவதால் விலை சரிந்துள்ளது. சம்பங்கி ரூ.20, முல்லை ரூ.80, ரோஜா ரூ.40, கனகாம்பரம் ரூ.200க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.