கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த செதில்பாக்கம், பல்லவாடா பகுதியில் நேற்று இரவு வாலிபர் இறந்து கிடப்பதாக பாதிரிவேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது, வெட்டுக்காயங்களுடன் சிதைந்த நிலையில் வாலிபரின் சடலம் கிடந்தது. போலீசார் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சூலூர்பேட்டையை சேர்ந்த தருண்குமார்(21) கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு வேலைக்கு தடா பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அன்று மாலை நண்பர்கள் 6 பேருடன் பல்லவாடா காட்டுக்கு சென்று கஞ்சா மற்றும் மது அருந்தியுள்ளனர். அப்போது, ஏற்பட்ட மோதலில் நண்பர்கள் அவரை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் தருண்குமாருக்கும் அவரது நண்பர்களுக்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தருண்குமாரின் நண்பர்களை தேடுகின்றனர்….
வாலிபர் அடித்துக்கொலை
previous post