கரூர், ஜூன்6: கோரிக்கை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் நிர்வாகி ராஜசேகர் தலைமை வகித்தார். அனைத்து நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும், மல்யுத்த சம்மேளன தலைவர் மீது நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து இந்த அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.