சென்னை: ரூ.1000 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை தனியாரிடம் இருந்து மீட்ட விவகாரத்தில் நில நிர்வாக ஆணையர் நாகராஜனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அரசு நிலத்தை மீட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், வருவாய்த்துறை செயலர் குமார் ஜெயந்த், அரசு வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்தார். சென்னை, அண்ணா மேம்பாலம் அருகே மதிப்பு வாய்ந்த 115 கிரவுண்டு நிலத்தை அரசு நேற்று மீட்டது.