Monday, June 17, 2024
Home » வழிப்பறி செய்ததை போலீசுக்கு தெரிவித்ததால் காங்கிரஸ் மாநில நிர்வாகிக்கு சரமாரி அரிவாள் வெட்டு: 4 வாலிபர்கள் கைது

வழிப்பறி செய்ததை போலீசுக்கு தெரிவித்ததால் காங்கிரஸ் மாநில நிர்வாகிக்கு சரமாரி அரிவாள் வெட்டு: 4 வாலிபர்கள் கைது

by kannappan

சென்னை: பெரியமேடு சடையப்பன் தெருவை சேர்ந்தவர் அப்ரோஸ் அகமது (36). காங்கிரஸ் ஐடி பிரிவு மாநில நிர்வாகியான இவர், அதே பகுதியில் சுப நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்களை வாடகைக்கு விட்டு வருகிறார். கடந்த வாரம் இவரது வீட்டின் அருகே, மூட்டை தூக்கும் 3 பேர் வாலிபர்கள், ஒருவரை வழிமறித்து பணம் பறித்தனர். இதுகுறித்து அப்ரோஸ் அகமது போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன், ஆதாரமாக சிசிடிவி பதிவுகளையும் கொடுத்ததாக கூறப்படுகிறது.அதன்பேரில், போலீசார் வழிப்பறி செய்த பெரியமேடு பகுதியை சேர்ந்த கபிலன் (36), லோகேஷ் (31), விக்னேஷ் (33), கபில் (32) ஆகியோரை கடந்த வாரம் கைது ெசய்தனர். ஜாமீனில் வெளியே வந்த 4 பேரும், நேற்று முன்தினம் இரவு அப்ரோஸ் அகமது கடைக்குள் புகுந்து,  அரிவாளால் சரமாரியாக அவரை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினர். இதில் படுகாயமடைந்த அப்ரோஸ் அகமதுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அப்ரோஸ் அகமது அளித்த புகாரின்படி வேப்பேரி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கபிலன், லோகேஷ், விக்னேஷ், கபில் ஆகியோரை கைது செய்தனர்….

You may also like

Leave a Comment

eighteen + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi