Tuesday, May 21, 2024
Home » வரம்பு மீறி பேசியதால் ஆத்திரம்!: சீர்காழியில் இளைஞர்களை லத்தியால் சரமாரியாக தாக்கிய காவலர் கைது..!!

வரம்பு மீறி பேசியதால் ஆத்திரம்!: சீர்காழியில் இளைஞர்களை லத்தியால் சரமாரியாக தாக்கிய காவலர் கைது..!!

by kannappan

மயிலாடுதுறை: சீர்காழியில் முன்விரோத தகராறில் காவலர் ஒருவர் இளைஞர்களை லத்தியால் தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இளைஞர்களை தாக்கிய காவலர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெரு பகுதியை சேர்ந்த தனசேகரன், வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். தனசேகரன் உறவினர்களுக்கும், அதே பகுதியில் உள்ள பன்னீர்செல்வம் நகரை சேர்ந்த தேவேந்திரன் மகன் பிரதீப் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. 3 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு பின் இரு தரப்பினரும் சமாதானமாக சென்றுள்ளனர். இந்நிலையில் பிரதீப், அவரது உறவினரான அமிர்தராஜுடன் சேர்ந்து தனசேகரன் உறவினர் வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த காவலர் தனசேகரன், பிரதீப் மற்றும் அமிர்தராஜை தட்டி கேட்டுள்ளார். இதில் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இளைஞர்கள் வரம்புமீறி பேசியதால் ஆத்திரமடைந்த தனசேகரன் அவர்களை லத்தியால் சரமாரியாக தாக்கினார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. காவலர் தாக்கியதில் படுகாயமடைந்த இளைஞர்கள் இருவரும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்த சீர்காழி போலீசார், இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து காவலரை கைது செய்தனர். …

You may also like

Leave a Comment

16 + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi