வெள்ளக்கோவில், ஜூன்23: வெள்ளக்கோவில் காவல் நிலையத்திற்குட்பட்ட முத்தூர் பகுதியில் சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வெள்ளக்கோவில் போலீசார் நடத்திய சோதனையின் போது முத்தூர் கொடுமுடி பகுதியில் உள்ள டீக்கடை மற்றும் பேக்கரியில் அமர்ந்து லாட்டரி விற்ற சரவணன்(45) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மூன்று நம்பர் எழுதிய லாட்டரி துண்டு சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.