Tuesday, May 21, 2024
Home » மொபெட் மீது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

மொபெட் மீது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

by Ranjith

 

ஆண்டிமடம்,நவ.26: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே காட்டாத்தூர் கீழத்தெருவை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை (70). கூலி தொழிலாளி. இவர் தனது மொபட்டில் மக்கள்நல பணியாளர் வேல்முருகன் என்பவர் வீட்டுக்கு சென்று விட்டு ஆண்டிமடம் வாரியங்காவல் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பின்னால் பைக்கில் வந்த பிரேம்குமார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதினார். இதில் கீழே விழுந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பைக்கில் பின்னால் உட்கார்ந்து வந்த சீனிவாசன், பிரேம்குமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆண்டிமடம் போலீசார் பிச்சைபிள்ளையின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த பிரேம்குமாரையும், சீனிவாசனையும் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

1 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi