உத்தமபாளையம், ஜூலை 30: உத்தமபாளையம் கோட்டைமேடு தெருவில் ரசூல் சாஹிப் தர்கா உள்ளது. நேற்று நடந்த மொகரம் 10ம் நாளில் ரசூல் சாஹிப் தர்காவில், மௌலீது சரிப் ஓதப்பட்டது. இதில் இமாம்கள் இஸ்மாயில், ரிஷ்வான் கலந்து கொண்டு, மவ்லீது ஓதி கூட்டு பிரார்த்தையில் ஈடுபட்டனர்.நிகழ்வில் ரசூல் சாஹிப் தர்கா பரம்பரை முத்தவல்லி மைதீன் ஷா சையது அப்தாகீர் தலைமையில் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. முகரம் சிறப்பு பிரார்த்தனையாக உலகமக்கள் நலன் வேண்டி பிரார்த்திக்கப்பட்டது. இதில் இஸ்லாமியர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
மொகரம் கொடியேற்று விழா
previous post