சேலம், பிப்.16:சேலம் சீலநாயக்கன்பட்டி சின்னபச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(57). இவர் கடந்த 11ம்தேதி கொண்டலாம்பட்டியிலிருந்து சீலநாயக்கன்பட்டி நோக்கி சென்று கொண்டி ருந்தார். அப்ேபாது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். இதற்கிடையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூளைச்சாவு அடைந்த முதியவர் உயிரிழப்பு
previous post