Friday, May 24, 2024
Home » மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று 1000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று 1000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

by Karthik Yash

சென்னை, டிச.9: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 1000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மக்கள் நல்வாழ்வுத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த அக்.23ம் தேதி தொடங்கி தற்போது வரை வாரம்தோறும் சனிக்கிழமைகளில் 1000 முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, 2000க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. அந்தவகையில் கடந்த 6 வாரங்களில் இதுவரை 13,234 முகாம்கள் நடைபெற்று, அதில் 6,50,585 பேர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர்.

தற்போது பருவமழைக்காலமாக உள்ள காரணத்தினால் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் 3000 இடங்களிலும், அதில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில், சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோதாமேடு பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து ஆய்வு செய்ய உள்ளேன். பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டு மழைக்கால நோய்களிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நிவாரண உதவி: மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அடையாறு ஆற்றங்கரையோர பகுதிகளான நெருப்புமேடு, ஜோகி தோட்டம், ஜோதியம்மாள் நகர், செட்டித்தோட்டம், விநாயகபுரம், சித்ரா நகர், கோட்டூர்புரம், வாம்பே குடியிருப்பு, அன்னை சத்யா நகர், ரங்கராஜபுரம், சின்னமலை ஆரோக்யா மாதா குடிசைப்பகுதி ஆகிய பகுதிகளில் உள்ள 6000 குடும்பங்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வீடு வீடாக சென்று 5 கிலோ அரிசி, போர்வை, தண்ணீர் பாட்டில் மற்றும் பிஸ்கட் ஆகிய பொருட்களை வழங்கினார்.

You may also like

Leave a Comment

two + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi