சென்னை, டிச.9: மிக்ஜாம் புயல் மழையால் சென்னையில் கடந்த 3ம் தேதி முதல் 8ம் ேததி வரையில் அதி நவீன கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட 6,670 வழக்குகளை ரத்து செய்து மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.சென்னை மாநகர காவல் எல்லையில் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் வகையில் பல்வேறு அதி நவீன கேமராக்கள் பொருத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அண்ணாநகர், அண்ணாசாலை உட்பட பல முக்கிய சந்திப்புகளில் ‘ஏஎன்பிஆர்’ என்ற தானேயியங்கி மூலம் புகைப்படத்துடன் வழக்கு பதிவு செய்யும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த அதி நவீன கேமரா மூலம் சராசரியாக நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த 3ம் தேதி முதல் 8 ம் ேததி வரையில் வெவ்வேறு சந்திப்புகளில் நிறுவப்பட்டுள்ள ஏஎன்பிஆர் கேமராக்கள் மூலம் மொத்தம் 6,670 வழக்குகள் பதி வாகியுள்ளது.புயல் மழையினை கருத்தில் கொண்டு, இந்த ஒரு முறை மட்டும் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை ஏஎன்பிஆர் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.