தூத்துக்குடி, ஏப்.14: தூத்துக்குடி கீழ செக்காரக்குடி, கிழக்கு தெருவைச் சேர்ந்த நாராயணனின் மகன் முருகன் (47). தொழிலாளியான இவர், கடந்த மார்ச் 11ம் தேதி மாலை வீட்டைவிட்டு வெளியே சென்றபோது திடீரென மாயமானார். இதனால் பதறிய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை பற்றிய எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் காலை கீழ செக்காரக்குடி முனியசாமி கோயில் அருகேயுள்ள குளத்தில் சடலமாக மிதந்தார். தகவலறிந்து விரைந்துவந்த தட்டப்பாறை போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து முருகனின் மனைவி வசந்தி அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வனச்சுந்தர் மற்றும் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.