ஸ்பிக்நகர், ஏப்.14: புதியம்புத்தூர் சில்லா நத்தம் பகுதியை சேர்ந்த ராஜ் மகன் நல்லதம்பி(37). லாரி டிரைவர். இவர் முந்திரி லோடு ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள எடை நிலையத்தில் எடை போடுவதற்காக லாரியில் சென்றார். அப்போது எதிர் திசையில் இருந்து லாரி ஓட்டி வந்த தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் ஆரோக்கியராஜ் மகன் சதீஷ்குமார் (23) என்பவர் நல்ல தம்பியை அவதூறாக பேசியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், நல்ல தம்பியை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த நல்லதம்பி 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
டிரைவர் மீது தாக்குதல்
previous post