Monday, June 17, 2024
Home » மழையால் பாதிக்கப்பட்டு இடிந்து விழுந்த பாலம் சீரமைக்கப்படுமா?: 20 கிராம மக்கள் எதிர்பார்ப்பு

மழையால் பாதிக்கப்பட்டு இடிந்து விழுந்த பாலம் சீரமைக்கப்படுமா?: 20 கிராம மக்கள் எதிர்பார்ப்பு

by kannappan

திருவாடானை: திருவாடானை அருகே கடந்த 8 மாதங்களாக தரைப்பாலம் இடிந்து கிடக்கிறது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் புதிய பாலம் கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாடானை அருகே குருந்தங்குடிக்கு சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தரைப்பாலம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விட்டது. இந்த பாலத்தை சீரமைக்க பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து குறுந்தங்குடி மகாலிங்கம், ராஜேந்திரன் ஆகியோர் கூறுகையில், இந்த சாலை வழியாக தான் செகுடி,சிறு மலைக்கோட்டை,கவலை வென்றான் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயணிக்கின்றனர். மேலும் தேவகோட்டை எஸ்பி பட்டினம் நெடுஞ்சாலையுடன் பயணித்து ஈசிஆர் சாலையில் செல்லலாம். மற்றொரு வழியாக திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து இணைந்து திருவாடானை தேவகோட்டை செல்லலாம்.  இப்படி பல கிராமங்களை இணைக்கும் இந்த சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கடும் மழையால் பாதிக்கப்பட்டு இடிந்து விட்டது.இவற்றை சரி செய்து தர பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை சரி செய்யப்பட வில்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த சாலையை கடந்த லாரி ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த சாலையை கடக்கும் போது வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்து ஏற்பட்டு விழுந்து காயத்துடன் செல்கின்றனர். எனவே இந்த தரைபாலத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் சிறிய அளவிலான மேம்பாலம் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்….

You may also like

Leave a Comment

seventeen − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi