சிங்கம்புணரி, மார்ச் 28: சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூர் பகுதியில் எஸ்.வி.மங்கலம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஜீவா நகரை சேர்ந்த பழனியப்பன் (54) என்பவர், அனுமதியின்றி மது விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 49 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார் பழனியப்பனை கைது செய்தனர்.
மது விற்றவர் கைது
previous post