Monday, June 17, 2024
Home » மதுரை எய்ம்சில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு நடைபெறுமா? மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை எய்ம்சில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு நடைபெறுமா? மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

by kannappan

மதுரை: மதுரை மாவட்டம், அதலையைச் சேர்ந்த புஷ்பவனம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மற்றும் தெலங்கானா பி.பி நகர் எய்ம்சிற்கு ஒரே நாளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் வெளிநோயாளிகளில் சிகிச்சை பிரிவும், எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான வகுப்புகளும் நடந்து வருகிறது. ஆனால், மதுரையில் மட்டும் எந்தவித பணியும் நடக்கவில்லை. எனவே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டக் குழுவை உருவாக்கவும், உடனடியாக தற்காலிக வெளிநோயாளிகள் பிரிவை உருவாக்கவும், எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் மூத்த வக்கீல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடங்கள் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசிடம் இருந்து தற்காலிக வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான திட்ட வரைவு எதுவும் கிடைக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து திட்ட வரைவு வந்தால் அதை செயல்படுத்த தயாராக உள்ளோம்’’ என்றார். மனுதாரர் வக்கீல் அழகுமணி ஆஜராகி, ‘‘மதுரை எய்ம்சில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை இந்தாண்டு துவங்கவுள்ளதாக நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவ், தினகரன் நாளிதழில் பேட்டியளித்துள்ளார்’’ என்றார். அப்போது மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க 3 வார அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் கூறியுள்ளபடி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு தரப்பில் விரைவாக பதிலளிக்க வேண்டும்’’ என கூறி, விசாரணையை ஜூன் 30க்கு தள்ளி வைத்தனர்….

You may also like

Leave a Comment

10 − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi