போடி, ஆக. 23: போடி அருகே உள்ள மல்லிங்காபுரத்தை சேர்ந்தவர் ராஜா மனைவி வெண்ணிலா (42). கூலி வேலை செய்து வருகிறார். இவர், வீட்டின் அருகே உள்ள சாலையில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஆண்டிபட்டி மணியக்காரன்பட்டியை சேர்ந்த வீரபாண்டி (26) என்பவர் ஓட்டி வந்த ஜீப் எதிர்பாராதவிதமாக வெண்ணிலா மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.