சென்னை: சென்னை முகப்பேரில் போக்சோ வழக்கில் மூன்று வருடமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் சுமதி(39), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 2018ல் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியதாவது: `15 வயது மதிக்கதக்க எனது மகளை அதே பகுதியை சேர்ந்த ராஜா(38) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் ராஜா மீது போக்சோ வழக்கு பதிவு செய்து ராஜாவை அன்றே கைது செய்து சென்னை மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறைசாலையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த ராஜா 3 வருடமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் போலீசார் டிமிக்கி கொடுத்து தலைமறைவாக சுற்றி வந்தார். ராஜா நேற்று முன்தினம் திருமங்கலம் அருகே சுற்றி தெரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையில் கொண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவை கைது செய்து மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்….
போக்சோ வழக்கில் 3 வருடமாக தலைமறைவு வாலிபர் பிடிபட்டார்
previous post