Tuesday, May 21, 2024
Home » பொதட்டூர்பேட்டையில் ₹1.50 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் நவீனமயம்: பயணிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி

பொதட்டூர்பேட்டையில் ₹1.50 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் நவீனமயம்: பயணிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி

by Karthik Yash

பள்ளிப்பட்டு, செப். 3: திமுக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் வகையில் ₹1.50 கோடி மதிப்பீட்டில் பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையம் நவீனமயமாக உள்ளது. எனவே, பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை பேரூராட்சி உள்ளது. இங்கு, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, சுற்றுவட்டார கிராம மக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் தினந்தோறும் இந்த பொதட்டூர்பேட்டைக்கு பேருந்து நிலையம் வர வேண்டும். இங்கிருந்துதான், பேருந்துகள் மூலம் திருத்தணி, திருவள்ளூர், சென்னை, பள்ளிப்பட்டு, சித்தூர், சோளிங்கர், திருப்பதி, வேலூர் உட்பட பல்வேறு நகர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த பேருந்து நிலையத்தில் பேரூராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள கடைகள் சேதமடைந்து இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது. மேலும், பேருந்துகளுக்காக திறந்த வெளியில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தும் வந்தது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலின்போது திமுக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் வகையில், தற்போது, பேருந்து நிலையம் நவீனமயமாக்கும் பணிகளுக்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, இயக்கம் மற்றும் பராமரிப்பு துறை சார்பில் ₹1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பேருந்து நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் சில மாதங்களுக்கு முன்பதாக அகற்றப்பட்டது. மேலும், 20 அடுக்குமாடி கடைகள் கட்டவும், பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டது.

இதில், கடைகள் விரைவில் இடிக்கப்பட்டு புதிதாக இரண்டு அடுக்குமாடி 20 கடைகள் கட்டவும், திறந்த வெளியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு மேற்கூரை அமைத்து நவீன வசதிகள் செய்து தர தேவையான நடவடிக்கைகளை பேரூராட்சி சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், விரைவில் பேருந்து நிலைய பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு விரைந்து, பணிகள் முடிக்கப்படும் என்றும் இதன் மூலம் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தரவும் கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் அமைய உள்ளதால் பயணிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிப்பிடம் சேதமடைந்து போதிய வசதிகள் இல்லை. எனவே, பொது கழிப்பிடம் அகற்றி மாற்று இடத்தில் நவீன கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள், வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

1 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi