ஐதராபாத்: தனது பேஸ்புக் பக்கத்தில் ஆபாச பதிவுகள், புகைப்படங்கள் வெளியிடப்படுவதாக நடிகை விஷ்ணுபிரியா புகார் கூறியுள்ளார். தெலுங்கில் பல படங்களில் நடித்தவர் விஷ்ணுபிரியா. இவர் பேஸ்புக்கில் மும்முரமாக ஈடுபாடு காட்டுபவர். பல வருடமாக அதில் பதிவுகளை வெளியிடுவது, தனது ரசிகர்களுடன் உரையாடுவது, தனது போட்டோ ஷூட் படங்களை வெளியிடுவது என பிசியாக இருப்பார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவரது பேஸ்புக் பக்கத்தில் ஆபாச பதிவுகள், ஆபாச புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதை பார்த்த விஷ்ணுபிரியாவும் அதிர்ச்சியடைந்தார். அவர் கூறும்போது, ‘யாரோ எனது பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்திருக்கிறார்கள். அவர்கள்தான் இதுபோன்ற கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இது பற்றி தொழில்நுட்ப பிரிவினரிடம் கூறியிருக்கிறேன். அவர்கள் எனது பக்கத்தை மீட்டு தர முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதுவரை ரசிகர்கள் இந்த பதிவுகளை கண்டுகொள்ள வேண்டாம். சமூக விரோதிகளின் இந்த செயலால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இது பற்றி போலீசில் புகார் தரவும் யோசித்து வருகிறேன்’ என்றார்….
பேஸ்புக்கில் ஆபாசம் நடிகை புகார்
previous post