தொண்டாமுத்தூர், டிச.13: கோவை அருகே பேரூர் தனியார் மண்டபம் பின்புறம் சூதாட்டம் நடைபெறுவதாக பேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி மற்றும் போலீசார் விரைந்து சென்று அப்பகுதியை சோதனை செய்தனர்.
அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (29), ராஜ்குமார் (29), மணிகண்டன் (31), பால விநாயகர் கோயில் வீதி சுப்பிரமணியம் (36), கார்த்திக் (30), சிவாஜி நகர் மோகன் (35), பால்ராஜ் (42), வெங்கடேஷ் (47) உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.8 ஆயிரத்து 200ஐ பறிமுதல் செய்தனர்.