பெரம்பலூர்: மாற்றுத்திறனாளிகள் அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களையும் எளிதில் அணுகும் வகையில் தடையில்லா சூழ்நிலை ஏற்படுத்துவது தொடர்பான பயிற்சி அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கு நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பாக \”உரிமைகள் திட்டத்தில்\” அனைத்து துறை அலுவலர்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களையும் எளிதில் அணுகும் வகையில் தடையில்லா சூழ்நிலை ஏற்படுத்துவது தொடர்பான பயிற்சி அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி ஸ்பேஸ்டிக் சொசைடிக் ஆப் இந்தியா இயக்குநர் சாந்தகுமார், அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகள் தொண்டு நிறுவன பொறுப்பாளர் பவுல்துறை மற்றும் சுல்தான் (பயிற்சியாளர்) ஆகியோர் கலந்து கொண்டு அரசு துறை அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கினர்.