அரியலூர்: வேளாண் பயிர்சாகுபடிக்கு விதை, உரம், பூச்சுக்கொல்லிகள் போன்ற இடுப்பொருட்கள் இன்றியமையாததாகும். இவைகள் வேளாண்மைதுறை மற்றும் தனியர் இடுப்பொருள் விற்பனையாளர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில தனியார் இடுப்பொருள் விற்பனையாளர்கள் இடுப்பொருட்களை அனுபவத்தின் அடிப்படையில் வழங்கி வருகின்றனர். இவர்களுக்காக தேசிய வேளாண் மேலாண்மை விரிவாக்கப் பயிற்சி நிலையம் ஹைதராபாத் 2003ம் ஆண்டிலிருந்து வேளாண் இடுபொருட்கள் பற்றிய அடிப்படை அறிவை இடுபொருள் விற்பனையாளர்களுக்கு அளிக்கும் வகையில் வேளாண் விரிவாக்க சேவைக்கான ஓராண்டு பட்டயப் படிப்பினை நடத்தி வருகிறது. வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் இடுபொருள் வழங்குவதோடு மட்டுமல்லாமல் வேளாண் களம் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவதில் முதன்மையாக விளங்குகின்றனர்.