தக்கலை, ஜன.11: நீதிமன்றத்தில் தகராறு ெசய்தவர் கைது செய்யப்பட்டார். அருமனை குத்தறவிளையை சேர்ந்தவர் ராஜேஷ் (36). இவர் ஒரு வழக்கு ெதாடர்பாக தக்கலை குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்தார். அப்ேபாது அவர் மது அருந்திய நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் நீதிமன்றத்தில் ஆபாசமாக பேசியதுடன் தகறாறு செய்து, நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு செய்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்ற ஊழியர் தாணு அளித்த புகாரின் பேரில் ராஜேஷ் மீது தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை ைகது ெசய்தனர்.