Friday, May 17, 2024
Home » தொழில் போட்டியில் தொழிலாளியை வெட்டி கொன்றவருக்கு ஆயுள் சிறை

தொழில் போட்டியில் தொழிலாளியை வெட்டி கொன்றவருக்கு ஆயுள் சிறை

by Arun Kumar

 

திருவில்லிபுத்தூர், மார்ச் 14: தொழில் போட்டியில் தொழிலாளியை வெட்டி கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர்கள் முனியசாமி(51), வெங்கடாசலபதி(51). இருவரும் விறகு வெட்டும் தொழில் செய்து வந்தனர். இவர்களிடையே தொழில் போட்டி இருந்தது வந்தது. இதனால் ஆத்திரத்தில் இருந்த முனியசாமி, கடந்த 2020ல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வெங்கடாசலபதியை வெட்டி கொலை செய்தார். இதை தடுக்க வந்த அவரது மனைவி மற்றும் மகளையும் வெட்டினார். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக வெங்கடாசலபதி மகள் காளீஸ்வரி கொடுத்த புகாரின் அடிபடையில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து முனியசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயக்குமார், முனியசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் வெங்கடாசலபதியை வெட்டும்போது தடுக்க வந்தவர்களையும் வெட்டியதால் மேலும் ஆறு மாதமும் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் திருமலையப்பன் ஆஜரானார்.

You may also like

Leave a Comment

five × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi