சிவகாசி, மார்ச் 14: சிவகாசியில் லோக் அதாலத் மூலம் 694 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.சிவகாசி சார்பு நீதிமன்றத்திலும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலும், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகளில் 694 வழக்குகள் லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றத்தில்) மூலம் தீர்வு காணப்பட்டது. சிவகாசி தாலுகா வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான முருகவேல், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாரதி, நீதிபதி அமலநாதகமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் வழக்கு தொடுத்த இரு தரப்பினர்களும், வக்கீல்களும் சமரசம் செய்து கொண்டு வழக்குகளை முடித்து வைத்தனர். இதில் 694 வழக்குகள் தீர்வு செய்யப்பட்டு நஷ்ட ஈடாக ரூ.1 கோடியே 61 லட்சத்து 44 ஆயிரத்து 395 வசூலிக்கப்பட்டது.