திருவில்லிபுத்தூர், மார்ச் 14: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு ரெங்கமன்னார் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று முன்தினம் ரெங்க மன்னார் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சர்வ அலங்காரத்தில் ரெங்க மன்னார் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.