தேனி, டிச. 9: தேனி அல்லிநகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தேனி நகர, வட்டார காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேனி நகர காங்கிரஸ் தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். தேனி நகர நிர்வாகிகள் நாகராஜ், சுப்புலட்சுமி, பாலகுரு, முகமதுமீரான், பாண்டியன், செண்பகபாஸ்கரன் முன்னிலை வகித்தனர். தேனி வட்டார காங்கிரஸ் தலைவரும் தேனி யூனியன் துணை சேர்மனுமான முருகன் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூடலூர் முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தின்போது, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்பதுள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் அப்பு (எ) பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் சம்சுதீன், பொதுக்குழு உறுப்பினர்கள் முனியாண்டி, சின்னப்பாண்டி, மகிளா காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணவேணி, எஸ்சி, எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் இனியவன், மாநில செயலாளர் முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் சுதாகர் நன்றி கூறினார்.