Tuesday, May 28, 2024
Home » தெலங்கானாவில் அதிகாலை பயங்கரம்: குடிசைக்குள் கார் புகுந்து 4 பெண்கள் பரிதாப பலி

தெலங்கானாவில் அதிகாலை பயங்கரம்: குடிசைக்குள் கார் புகுந்து 4 பெண்கள் பரிதாப பலி

by kannappan

திருமலை1: தெலங்கானாவில் சாலையோர குடிசைக்குள் கார் புகுந்து 4 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.  தெலங்கானா மாநிலம், கரீம்நகரின் புறநகர் பகுதியில் சாலையோரத்தில் குடிசை அமைத்து கூலித்தொழிலாளர் குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவர்கள் தினமும் பகலில் கூலி வேலை செய்துவிட்டு இரவு அந்த குடிசை வீட்டில் தூங்குகின்றனர். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவும் தங்கள் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அவ்வழியாக வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து குடிசை வீட்டுக்குள் புகுந்தது. இதில், குடிசை வீட்டில் தூங்கி கொண்டிருந்த 4 பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் குடிசை இருந்த இடம் தெரியாமல் தூக்கி வீசப்பட்டது. காரில் வந்த இளைஞர்கள் 4 பேர் காரை அங்கேயே விட்டு தப்பியோடி விட்டனர்.இதுகுறித்து தகவலறிந்த கரீம்நகர் போலீசார் அங்கு வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரீம்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய இளைஞர்கள் 4 பேரை தேடி வருகின்றனர்….

You may also like

Leave a Comment

eleven + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi