தென்காசி, மார்ச் 29: தென்காசி ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 27வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் கல்லூரியின் தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். செயலாளர் பத்மாவதி மணிமாறன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்திரசேகர் சிறப்புரையாற்றி பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்ற 400க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் கல்லூரியின் நிர்வாக அதிகாரி பத்மாவதி மகாராஜன், மருந்தியல் கல்லூரி முதல்வர் பாத்திமா ரோஸ், அனைத்துத் துறை தலைவர்களும் பேராசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் கோதர் முகைதீன் ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் ராமர் நன்றி கூறினார்.
தென்காசியில் ராம் நல்லமணி யாதவா கல்லூரி பட்டமளிப்பு விழா
previous post