திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே அரங்கன் துர்கம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டதில் 5,000 கோழிகள் உயிரிழந்தன. துரை என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆம்பூர் தீயணைப்பு துறையினர் கோழிப்பண்ணையில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.