வீரவநல்லூர், மார்ச் 29: வீரவநல்லூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீரவநல்லூரை அடுத்த தெற்கு வீரவநல்லூர் கிராமம், ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் ஜெபக்குமார். இவரது மனைவி முருகஜோதி (29). இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக விரக்தியில் இருந்த முருகஜோதி நேற்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வீரவநல்லூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
previous post